
என்ன அநியாயம்யா இது, ஓட்டு போட பணம் குடுத்துட்டு, நீ எனக்கு தான் ஓட்டு போடணும்னு மிரட்டறானுங்க!, இவனுங்கள எல்லாம் தூக்குல போடணும் சார் !
எப்படி புஷ் , சதாம் உசேன தூக்குல போட்டரோ, அந்த மாதிரி ஒபாமா வந்து இவனுங்கள புடிச்சி தூக்குல போடணும் !
இப்ப பாத்தீங்கன்னா , அந்த காலத்துல சிவாஜி கூட நின்னாரு, எம்ஜார எதுத்து ஒரு ஓட்டு வாங்க முடிஞ்சுதா? அதுக்கு எல்லாம் , நல்ல மனசு வேணும்ங்க! இப்ப பாருங்க இந்த விஜயகாந்த், இவன்லாம் என்ன பண்ண போறான் ? பத்து எடத்துல நின்னு தோத்துத்தான் போக போறோம் னு தெரிஞ்சும், ஒண்ணு, ரெண்டு ஓட்டுக்காக எதுக்கு நிக்கணும்ங்கறேன்?
பஸ்ஸு டிகெட்டு விலைய இவனுங்க பாட்டுக்கு ஏத்திடறானுங்க , காய் கறி வெலையெல்லாம் தாறுமாறா ஏறுது! என்ன நடக்குது சார் இங்க ? இந்த கருணாநிதி ஆட்சிலாம் ஆட்சியா ?
நிறுத்துக..........
இதெல்லாம் நான் கேட்டது சென்னை மாநகர பேருந்து ஒன்றில்.
அய்யா, அரசியல் பேசும் புண்ணியவான்களே! நீங்கள் உங்கள் நண்பர் ஜமாவிலோ, அல்லது உங்களுகென்று இருக்கும் விவாத கூட்டத்திலோ இதெல்லாம் பேசுங்கள்! மக்கள் கூடும் பொது இடங்களில் வேண்டாமே ப்ளீஸ்! உங்கள் கருத்தை ஒத்த சிந்தனை கொண்டவராக இருந்தால், பிரச்சனை இல்லை, மாற்று கருத்து கொண்டவர் உங்களுடன் பயணம் செய்தால் ??
அதனால், இடம் பொருள் ஏவல் அறிந்து அரசியல் பேசவும் . இது தேர்தல் சீசன் வேறு! வருகிறவன் போகிறவன் எல்லாம் அடிப்பான். கடைசியில் வடிவேல் மாதிரி 'அம்மே , அம்மே !' என்று முனகி கொண்டிருக்க வேண்டியதுதான்!
சந்தேக சதாசிவம் : எல்லாம் சரி! ஒபாமாவுக்கும் நம்மூர் உள்ளூர் தேர்தலுக்கும்
என்ன சம்பந்தம்? அவர எல்லாம் கூட்டிட்டு வந்து எதுக்கு இதுக்குள்ள இழுக்கணும்?
No comments:
Post a Comment